உங்களை வியப்பில் ஆழ்த்தும் பத்து உண்மைகள்
Intresting facts
10. PLUTO கிரகம் - interesting facts about pluto
நமது விண்வெளியில் அதாவது சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில் மிகசிறிய குறுங்கோள்தான் (DWARF PLANET) புளூட்டோ இது அளவில் மிகசிறியது இதன் பரப்பளவு 7,232 KM மட்டுமே. இது நம்முடைய நாடான இந்தியாவின் பரப்பளவைை விட மிகசிறியது. புளூட்டோ கிரத்தை 1930 ஆண்டுதான் கண்டுபிடித்தனர்.
9.எறும்புகள் - Ants
இந்த எறும்புகளை வைத்து நாம் வீட்டில் வாங்காத கிட்டே கிடையாது என்னடா உலரிகிட்டிருக்கனு நீங்கள் பார்க்கிறீர்களா...?
இந்த எரும்பானது பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அயராது உழைத்துக் கொண்டிருக்க கூடிய மிகப்பெரிய கடின உழைப்பாளி. இதிலிருந்து உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நாம் ஏன் அடிக்கடி வீட்டில் திட்டு வாங்கிட்டு இருக்கோம்னு.
எறும்புகளானது உலகில் உள்ள மற்ற உயிரினங்களை விட மிகவும் சுருசுருபாகவும் விவேகமாகவும் செயல்படக்கூடிய ஓர் உயிரினம். இந்த எறும்புகளின் ஆயுட்காலம் பதினைந்து முதல் பதினெட்டு ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
இந்த 15 ஆண்டுகளும் எறும்புகள் உறங்குவதே கிடையாது அதாவது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் எறும்புகளுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை தூக்கம் என்பதே கிடையாது.
அதிலும் இந்த இராணி எறும்பானது முப்பது ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது கிட்டதட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுக்கக்கூடியது.
8.FINLAND EDUCATION SYSTEM - interesting facts about finland
பின்லாந்து நாட்டில் உள்ள மாணவர்களுக்கு 16 வயது வரை தேர்வுகளே
வைக்கபடுவதில்லை அவர்களுக்கு திறன் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது அது மட்டுமின்றி உலகிலேயே அதிக திறன் கொண்ட மாணவர்களாக உள்ளனர். உலகிலேயே மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நாடும் இந்த பின்லாந்துதான்.
ஏண்டா சந்தோஷமா இருக்கமாட்டாங்க அந்த ஊர்ல தான் எக்ஸாமே கிடையாது. ஆனா நம்ம ஊர்ல தான் சும்மா சும்மா பப்ளிக் எக்ஸாம் வைக்கிறாங்க. தொட்டதுக்கெல்லாம் நீட் எக்ஸாம்னு சொல்லி பலபேர சாவடிக்குறாங்க மேலும் தொட்டதுக்கெல்லாம் கவர்மெண்ட் எக்ஸாம் நமக்கு இருக்கிற பல தலைவலிகளை கம்பேர் பண்ணும்போது அவங்க சந்தோஷமா இருக்குறத பாத்தா நமக்கு கடுப்பா இருக்குல.
நாமலும் போலாம்னு பாத்தா முடியாது போல... எல்லா எக்ஸாமையும் இங்க எழுதியாச்சு பாஸும் பன்னியாச்சு. இனிமேல் போனா என்ன போகலனா என்ன...!
7.இந்தியாவின் முதல் இராக்கெட் - india first rocket launch
இன்றைக்கு நாளில் நாம் டிவில பார்க்கிறோம் இஸ்ரோ மூலமா சந்திராயன் அனுப்புறாங்க நாஸா மூலமா அப்போலோ அனுப்புறாங்க அப்படி இப்படினு நிறைய நியூஸ அடிக்கடி நாம் பார்க்கிறோம்.
நம்ம இந்தியாவிலே முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டை எதை வச்சி எடுத்துகிட்டு போனாங்க...?
எதை வைத்து லேன்ஞ் பண்ணாங்க அப்படிங்கற ஒரு ஃபன்னான உண்ணை சம்பவத்தை உங்களுக்கு இந்த பதிவுல சொல்லப் போறேன். வாங்க பாப்போம்
இந்தியாவின் முதல் விண்வெளி ஏவுதலுக்கான ராக்கெட் ஆனது 1963 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஏவுதளத்திற்கு ஒரு சைக்கிளிலின் உதவியைக் கொண்டு எடுத்து செல்லப்பட்டது.
இந்த ஏவுதலானது நாசாவால் தயாரிக்கப்பட்ட நைக்-அப்பாச்சி என்ற ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி இந்தியாவானது விண்வெளி ஆராய்ச்சி அமைப்பிற்க்கு அடித்தளம் போட்டது (இஸ்ரோ).
அதன் பிறகுதான் இந்தியாவானது இஸ்ரோ தலைமையில் முதன்முதலில் 1975 ஆம் ஆண்டு ஆரியபட்டா என்னும் செயற்கை கோளை அனுப்பியது.
ஆகஸ்ட் 15, 1969 ஆண்டு இந்த தேவாலயமானது பின்னர் விக்ரம் சரபாய் விண்வெளி மையம் என மறுபெயரிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
6.சாக்லேட் பூச்சீ - chocolate bugs
இன்றைய கால கட்டத்தில் காதல் என்றால் டைரிமில்க், நட்பு என்றாலும் டைரிமில்க் இதுமாதிரி தொட்டதுக்கெல்லாம் பல சாக்லேட்டுகளை வாங்கி அன்பளிப்பாக கொடுத்து வருகிறார்கள்.
சாக்லேட்டில் மறைந்திருக்கும் பல விசித்திரமான விந்தைகளை நாம் கவனிப்பதில்லை...!
உதாரணத்திற்கு சாக்லேட் நாம் அடிமையாக அதில் கொக்கைன் என்னும் ஒருவகையான வேதிப்பொருளை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியவில்லை.
அதை போல பல சத்துக்களை நமக்கு தருவதற்காக அதில் பல்வேறு விதமான அசிங்கமான செயல்களையும் செய்து வருகிறார்கள், அதை தெரியாமல் இனிப்பாக உள்ளது சுவை நாக்கிலேயே நடனம் ஆடுகிறது என்று கூறி நாம் டைரிமில்க், மஞ்ச், கிட்கட் போன்ற சாக்லேட்டுகளை வாங்கி உண்கிறோம். அதில் உள்ள மற்றொரு ரகசியத்தை நாம் பார்ப்போம் வாங்க....
நீங்கள் சாப்பிடகூடிய சாக்லேட்டில் 70 கும் மேற்பட்ட பூச்சிகளின் உடல்பாகங்கள் இருக்கலாம் என்று உங்களுக்கு சொன்னால் எப்படி இருக்கும்.
என்னாது நாம் சாப்பிடும் சாக்லேட்டில் பூச்சிகளா...?
பூச்சி என்று சொன்ன உடனே வாயில் மிட்டாய் இருந்தாலும் அதனை உடனே வாங்கி எடுத்து வெளியே தள்ளிவிடுவீர்கள் அந்த அளவுக்கு அருவருப்பாக உள்ளது அல்லவா...
ஆம், நாம் சாப்பிடும் சாக்லெட்டில் பூச்சிகள் கட்டாயம் இடம் பெற்றுள்ளது என்று இப்பொழுதாவது நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
எஃப்.டி.ஏ வழிகாட்டுதல்களின்படி, 125 கிராம் சாக்லேட்டில் 60-74 பூச்சிகளின் உடல் துண்டுகள் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதாவது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் கிட்டதட்ட 6 பூச்சிகள் இருக்குமாம்.
5.பெண்களின் உள்ளாடை - womens bra
முந்தைய பதிவிலேயே நாம் தெளிவாக இதைப்பற்றி பார்த்திருப்போம் அந்த பதிவினை நீங்கள் இன்னும் படிக்கவில்லை என்றால் இந்த பதிவினை படித்து முடித்துவிட்டு அதனை படித்து பாருங்கள் உங்களுக்கு நிச்சயமாக இன்னும் தெளிவாக புரியும்.
உங்களுக்கு தெரியுமா...?
இந்த உலகில் உள்ள பெண்களில் 80% மேற்பட்டோர் தவறான SIZE -ல் தான் பிராக்களை அதாவது உள்ளாடைகளை அணிந்து வருகின்றனர்.
ஏனெனில் ஒவ்வொரு பெண்களுக்கும் மார்பகம் ஒரே அளவில் இருக்கும் என்று கூறிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் மார்பகமானது மாறுபடக்கூடியது.
4.வைரஸ் வாய் - mouth bacteria
நாம் வாழ்கின்ற இந்த உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால் சீனா முதலிடம் இந்தியா இரண்டாவது இடம் என்று நாம் கணக்கிட்டுக் கொண்டே போகலாம்.
வருங்காலத்தில் சீனாவை விட இந்தியாவானது முதலில் சென்று நிற்கலாம், இதையெல்லாம் இப்ப ஏன் சொல்லிகிட்டு இருக்க அப்படின்னு நீங்க பார்க்கிறீர்களா...!
மக்கள் தொகையைவிட இந்த உலகத்தில் கிட்டத்தட்ட பல மடங்கு அதிகமாக காணப்படும் கூடிய ஒரு உயிரினம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா...?
அதுவும் நமது உடலிலேயே தான் இருக்கிறது என்று சொன்னாள் சத்தியமாக நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.
நீங்கள் நம்பவில்லை என்றாலும் அது தான் நெசம்.
தற்போதைய நிலவரத்தின் படி உலகில் கிட்டதட்ட 750 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
நம் உலகின் மக்கள் தொகையை விட நம் ஒவ்வொருவரின் வாயில் ஒரு நாளில் மட்டும் 750 கோடிக்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உருவாகின்றன.
3.கடல் குதிரை ஆணா பெண்ணா
இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு பால் இனத்திலும் பெண்ணினம் தான் எப்போதும் கருத்தரித்து குழந்தைகளை ஈன்றெடுக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இங்கு ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது...!
ஆச்சரியம் என்னவென்றால் கடலில் வாழக்கூடிய உயிரினமானது ஓர் அதற்கு நேர்மாறாக உள்ளது. அதைப்பற்றி இங்கு தெளிவாக பார்ப்போம்
கடலில் வாழக்கூடிய வித்தியாசமான விலங்குகளில் ஒன்றுதான் இந்த கடல்குதிரை இந்த விலங்கு மட்டும்தான் ஆண் பாலினத்தில் கருத்தரிக்ககூடியது உலகில் வேறு எந்த உயிரனத்திலும் ஆண் கருத்தரிப்பதில்லை.
2.இரும்பு இதயம்
நமது உடலில் உள்ள உறுப்புகளில் அனைத்து உறுப்புகளுக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் நிச்சயமாக அதற்கு ஓய்வானது கிடைக்கும்.
ஆனால் நமது உடலில் என்றுமே ஓய்வெடுக்காமல் அதாவது நாம் இறந்த பிறகும் ஒரு மணி நேரத்திற்கு அதன் உயிரை தக்க வைத்துக் கொண்டு அதன் பணியை செய்து கொண்டிருக்கும் அத்தகு விசித்திரமான ஒரு உறுப்பு தான் இதயம்.
மனிதன் கருவில் தோன்றும் போது முதலில் உருவாகக்கூடிய உறுப்பு எதுவென்றால் அது இதயமே கடைசியில் மூச்சை நிறுத்துவதும் அந்த இதயம்தான்.
இதயம் ஆனது அதன் பணியை செய்யாமல் இடையில் நின்று விட்டால் நாம் பரலோகத்திற்கு பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியது தான்.
அத்தகைய இதயத்தை பற்றிய ஒரு சுவாரசியமான விஷயத்தை பார்ப்போம்
மனிதனின் இதயமானது ஒரு நாளில் உருவாக்ககூடிய ஆற்றலை வைத்துக்கொண்டு ஒரு பேருந்தை கிட்டதட்ட 32 கி.மீ இயக்கமுடியுமாம்.
இந்த அளவு ஆற்றலை வெளிப்படுத்துவதால் மட்டும் தான் நாம் அனைவரும் தினமும் புத்துணர்சியாக செயல்பட முடிகிறது. இல்லையெனில் நாம் மிகவும் பலகீனவர்களாக காணப்படுவோம்.
1.உலகின் மிகப்பெரிய பிரசவம்
நமது கிராமங்களில் நமது முன்னோர்களான தாத்தா பாட்டியைகிட்ட போய் உனக்கு மொத்தம் எத்தனை புள்ளைங்கனு கேள்வி கேட்டா அவங்க சொல்லுவாங்க எனக்கு மொத்தம் பதினோரு புள்ளைங்க கடைசியா ஒரு மகன் ஆக மொத்தம் 12 பேர் அப்படின்னு சொல்லும் போதே நம்ம அனைவரும் வாய பொளந்துகிட்டு வேடிக்கை பார்ப்போம்.
எதுக்குடா இத்தனை புள்ளைங்க அப்படினு ஒரு செகண்ட் மனசுக்குள்ளேயே நெனச்சுக்குவோம்.
இதென்னடா ஆச்சரியம் இதுக்கு மேல இன்னொரு ஆச்சரியம் இருக்குடா அப்படிங்கற அளவுக்கு ஒரு சம்பவம் இருக்கு அதை நீங்களே படிச்சி தெரிஞ்சிங்கோங்களேன்
அமெரிக்காவை சேர்ந்த திரையுலகின் பிரபலமான NADYA SULEMAN – என்பவர் 2009 ஆம் ஆண்டில் எட்டு குழந்தைகளை ஒரே பிரவத்தில் பெற்றெடுத்து உலகயே திரும்பி பார்க்க வைத்து அனைவருக்கும் ஆச்சரியத்தையும் உண்டாக்கிவிட்டார். இன்று உலகிலேயே இவர் மட்டும் தான் ஒரே பிரவத்தில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தாக கூறி கின்னஸ் சாதனையில் இடமும் பெற்றார். இதனால் இவரை அனைவரும் OCTOMOM என்று அழைக்கின்றனர்.
எனக்கு தெரிந்து 2009 ஆம் வருடத்தில் இரண்டு பேருடன் ஹாஸ்பிடலுக்கு வந்து வெளியே போகும்போது ஒரு படையோடு வெளியே சென்ற ஒரு பெண்மணி என்றால் அது இவராக மட்டும்தான் இருக்க முடியும்.
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் எட்டு.... அடேங்கப்பா....!
நன்றி!



0 Comments