நடிகர் அஜித்குமாரின் மூன்று கல்யாணம்... இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே..!
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக வலம் வருபவர்கள் தான் அஜித், ஷாலினி. அமர்க்களம் என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பொழுது காதல் வயப்பட்டு கடந்த 2000 ஆம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மூன்று விதமான முறையில் தங்கள் திருமணத்தை நடத்தி முடித்தனர். அதாவது அஜித்தின் அப்பா கேரளாவில் உள்ள பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு தமிழர். ஆனால் அஜித்குமாரின் அம்மா கொல்கத்தாவை சேர்ந்த குஜராத்தி. இதனால் அஜித்குமார் தன்னுடைய திருமணத்தை முதலில் குஜராத் வழக்கப்படி ஒரு முறை செய்து கொண்டார்.
அதன் பின்னர் அவரின் மனைவியான ஷாலினி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த முறைப்படியும் ஒரு முறை திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு எம்மதமும் சம்மதம் என்று தெரிவிக்கும் வகையில் இஸ்லாமிய (முஸ்லிம்) முறைப்படியும் அவர்களின் திருமணம் நடைபெற்றது.
தற்போது இந்த தம்பதிகளுக்கு அனுஷ்கா என்ற மகளும் மற்றும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட இருபது ஆண்டுகள் முடிந்த பின் இன்றளவும் அந்த காதலானது கொஞ்சம் கூட குறையாமல் இந்த ஜோடியினர் திரையுலகில் வலம் வருகின்றனர்.
இப்போது இருக்கும் நடிகைகள் திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். சில சமயங்களில் தனது நடிப்பிற்கு திருமணமானது ஒரு தடையாக இருந்தால் அப்படிப்பட்ட திருமண வாழ்வே எனக்கு வேண்டாம் என்று முடிவு செய்து விவாகரத்து வரை செல்கின்றனர். உதாரணத்திற்கு சமந்தா மற்றும் நாக சைதன்யா வின் விவாகரத்து மேலும் இன்று வைரலாக போய்கொண்டு இருக்கும் தணுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து.
இப்படி இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஷாலினி தனது புகழின் உச்சியில் இருந்த போதும் கூட தன்னுடைய காதலுக்காக திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்காமல் தனது குடும்பத்தை மட்டும் கவனித்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த நட்சத்திர ஜோடி இப்போது இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஒரு நல்ல உதாரணமாகும். இதனை போன்று இன்னொரு ஜோடியையும் உதாரணமாக கூறலாம், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவை கூறலாம்.
இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



1 Comments
Ennaikkum thala da
ReplyDelete