உங்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால்...?
ஹோட்டலின் ஓனர் சாதம் பரிமாறுவதற்காக ஒரு பெரியவர் (Customer) அமர்ந்திருந்த டேபிள் அருகே சென்று குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்.....
மதிய உணவுக்கு எவ்வளவு பில் போடுவீர்கள்...
உரிமையாளர் சொன்னார்...
பொரியல், கூட்டு குழம்புடன் ரசம் மற்றும் தயிர் 100 மடடும்,
தயிர் இல்லாமல் 80 ரூபாய்.
கிழிந்த சட்டையின் பாக்கெட்டில் இருந்து, கசங்கிய இருபது ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினார்...
இவ்வளவுதான் என் கையில் உள்ளது..
இதற்கு எவ்வளவு சாப்பாடு போட முடியுமோ அவ்வளவு சாப்பாடு போடுங்க....
குழம்பு இல்லாமல் வெறும் சாப்பாடுனாலும் பரவாயில்லை...
எனக்கு மிகுந்த பசியாக உள்ளது என்றார் பெரியவர்.
அந்த ஹோட்டல் உரிமையாளர் சற்றுநேரம் அந்த பெரியவரை கவணித்தார்...
நேற்று முதல் நான் எதுவும் சாப்பிட வில்லை
என்று சொல்லத் தயங்குகின்ற அவரது வார்த்தைகள். அவரது தொண்டையோ நடுங்குகிறது....
ஹோட்டல் உரிமையாளர் நல்ல மனதோடு அந்த பெரியவருக்கு குழம்போடு... அனைத்தையும் அவருக்கு பரிமாரினார்.
பிறகு அந்த ஹோட்டல்காரர் அந்த பெரியவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றார்....
சாப்பிடும்போதே அந்த பெரியவர் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன...
நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்...? என்று அந்த உறிமையாளர் கேட்க
அந்த வார்த்தையைக் கேட்ட பெரியவர் ஹோட்டல் உரிமையாளரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார்...
எனது கடந்த கால வாழ்க்கையை நினைத்தேன் அதனால்தான் நான் கண்ணீர் வடிக்கிறேன்....
எனக்கு மூன்று குழந்தைகள்,அதில் இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்.....
மூவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்....
நான் வேர்வை சிந்தி சம்பாதித்த ஒவ்வொரு பைசாவையும் அவர்களின் உயர்வுக்காகவும் அவர்களின் நன்மைக்காகவும் செலவழித்தேன். அதற்காக என் இளமையையும், 28 ஆண்டுகால பௌதிக வாழ்க்கையையும் இழந்து புலம் பெயர்ந்தேன்...
எல்லாவற்றுக்கும் மேலாக நான் கட்டிகிட்டு வந்த என் மனைவியும் என்னை முதுமையில் தனியே தவிக்க விட்டுவிட்டு மேலே போய்விட்டாள்....
சொத்து பிரிவினை செய்ய ஆரம்பித்ததில் இருந்து என் இருமகன்கள் மற்றும் எனது மகளும் என்னை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.
நான் அவர்கள் மூவருக்கும் சுமையானதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தேன்.
மெல்ல மெல்ல அவர்களும் என்னை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்....
எனக்கு வயதாகிவிட்டதல்லவா...
குறைந்தபட்சம் என் வயதிற்காகவாவது அவர்கள் மதிப்பு தரக்கூடாதா?
அவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகு தான் நான் இரவு உணவு சாப்பிடுவதற்கு செல்வேன், அப்போது எனது பிள்ளைகள் என்னை எதற்காவது திட்டுவதும், கூச்சலிடுவதும் வழக்கமாயிருந்தது, அந்த கூச்சலை கேட்டுக்கொண்டு நான் சாப்பிடும் அந்த சாப்பாடானது கண்ணீரும் உப்பும் கலந்தே இருக்கும்...
எனது பேரக் குழந்தைகளும் என்னிடம் பேசுவதே இல்லை. அப்படி என்னிடம் பேசுவதை பார்த்தால் அம்மா அப்பா அடித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஓடிவிடுவார்கள்...
இந்த வேதனையடுப்பில் நான் அங்கு எப்படி வாழ முடியும்..
இரவும் பகலும் வியர்வை சிந்தி, நல்ல தூக்கமின்றி உழைத்து, வயிற்றுக்குகூட விரும்பியதை சாப்பிடமுடியாமல், அவளும் நானும் குருவி உணவை சேர்த்தமாறி ஒவ்வொரு ரூபாயும் சேத்துவைத்த பணத்தில் வாங்கியதுதான் இந்த வீடு... எல்லாம் இருந்தும் நான் இப்போது தெருவில்...
ஆனால் நான் என்ன செய்வது...? மருமகளின் தங்கத்தை (Gold) திருடிவிட்டதாக - ஏதோ சாக்குப்போக்கில்- நான் திருடனாக முத்திரை குத்தப்பட்டேன்... பிறகு மகன் கோபமடைந்தான், நல்லவேலை என்னை அடிக்க அவனோ கை நீட்ட வில்லை. அந்த பாவத்தை அவன் செய்யவில்லை.
அது என் அதிர்ஷ்டம். அங்கேயே நான் இருந்து இருந்தால் அது நிகழ்ந்து இருந்தாலும் இருக்கலாம்,
இப்படியாக தன் பேச்சை நிறுத்திக் கொண்ட முதியவர்,
சாப்பாட்டின் நடுவில் எழுந்தார்..
உரிமையாளர் முன் 20 ரூபாய் தாளை எடுத்து நீட்டினார்..
ஆனால் உரிமையாளர், "வேண்டாம், பையில் வையுங்கள், இருக்கட்டும்....
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம்...
நீங்கள் எப்போதும் மதிய உணவு சாப்பிடலாம்" என்றார்
ஆனால் அந்த மனிதர் அந்த 20 ரூபாயை அங்கேயே அவர் அமர்ந்திருந்த மேஜை மீது வைத்துவிட்டு....
உங்கள் உதவிக்கு மிக்க மகிழ்ச்சி....
என்னை பற்றி என்ன நினைக்கிறாய்...?
சுயமரியாதை என்னை விட்டு என்றும் விலகாது, வருகிறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு சிறு துணிமூட்டையையும், கைத்தடியையும் எடுத்துக்கொண்டு திக்கு தெரியாத இடம் நோக்கி மெல்ல கிளம்பினானர்...
அந்த மனிதர் என் மனதில் ஏற்படுத்திய வலி இன்று வரை ஆறவில்லை.
அதனால்தான் *"ஒவ்வொரு துளிருமே கட்டாயம் ஒரு நாள் பழுத்து சருகாகும்"* என்று கூறப்படுகிறது.
பழுத்த சருகுபோன்ற பெரியவர்களை கண் போல் காக்க வேண்டும்.
என்றாவது நமக்கு இப்படி ஒரு நாள் வந்தால்..???
=======================
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை நீங்கள் பகிர விரும்புபவர்களுக்கு பகிருங்கள்..
யாரேனும் ஒருவர் மனம் மாறினால் *போதும்*...
மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும் நண்பர்களே.....
இதுபோல பல சுவாரஸ்யமான பதிவுகளை அன்றாடம் படிக்க



0 Comments