நாம் சாப்பிடுவது அனைத்தும் விஷம் என்று சொன்னால்...?
*மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..!*
ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை பெருமளவு வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் பெருமளவில் இல்லை..
இறைவன் சில பல விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான். அதாவது குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் மற்றும் வெப்ப நிலத்தில் சக்தி கொடுககும் கனிகள் என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..
தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..
அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கிருக்கும் வெயிலை தாக்குபிடிக்கப் படைக்கப் பட்டிருப்பது போல அங்கு வாழும் மனிதருக்களுக்காக படைக்கப்பட்டது அந்தக் கனி.
ஆப்பிள்பழம் உடலுக்கு சூட்டை கொடுக்கும் பழம் என்பதால் குளிர் பிரதேசத்தில் அது விளையும். எனவே குளிர்பிரதேச மக்களுக்கு ஆப்பிள் பழம் ஏற்றது.
மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை எங்கெங்கு படைக்க வேண்டுமோ அங்கங்கு இப்பூமி இங்கு விளைவித்தது..
இங்கு வெள்ளையன் வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.
வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...
வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..
தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...
அதுபோல புகையிலையும் அப்படி வந்ததே.
இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.
உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.
வெள்ளையன் நாம் சோம்பேரியாக சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான், வெற்றிலைக்குப் பாக்கையும் கொடுத்தான், மிளகை அவன் அவன் நாட்டிற்கு கொண்டு சென்றான்.
கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான், கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.
கள்ளுக்கு இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு வந்து நம்மை அடிமையாக்கினான். ஆனால் வெள்ளையனின் மதுபானத்தைவிட நம் முன்னோர்களின் பரம்பரியமான பனையின் கள்ளு உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது.
தேங்காய் இருந்த இடத்தை அளித்து இன்று எதுவெல்லாமோ தேங்காயிற்க்கு பதில் பயன்படுத்தப்படுகிறது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல அதை மற்றொரு பதிவில் பார்ப்போம்.
மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிர் என்றிருந்த தமிழர் உணவு வகையில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் இந்த வெளிநாட்டுக்காரன். அதனால் இங்கு பல நோய்கள் பெருகின..
ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...
ஆப்பிளை மட்டுமா கொண்டு வந்தான்? கேரட் , பீட்ரூட் இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..
ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின..
(ஆனால் அவற்றிலும் பல சத்துக்கள் அடங்கியிருந்தது ஒருசில காய் மற்றும் கனிகளில்)
அத்தோடு விட்டானா?
அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.
அதன் விளைவு..?
தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின ...
சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான்னா இல்லை.
சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...
ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்டு வந்தனர், வட இந்தியர் நெய்யோடு உண்டு வந்தனர், ஆனால் தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்.
நோய் பெருகிற்று....
அதாவது சூடான பூமியில் சூட்டை ஏற்படுத்தும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்து வந்தோம்.
அது இன்று பலரின் பிடித்த உணவாகவும் மாறியுள்ளது.
வெள்ளையனின் குளிர்ந்த நாட்டில் அரிசி கஞ்சியையும், பனங்கள்ளையும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?
குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.
உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..
இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நமது முன்னோர்கள் நல்லெண்ணெய் குளியல், உணவில் நெய் என இன்னும் பல விசயங்களை கையாண்டு வந்தனர்.
எல்லாம் பழமைத்தனமும் ஒழிக்கபட்டது இந்த வெள்ளையனால்.
இன்று சமைக்க பயன்படும் எண்ணெயும் ஓர் கலப்படமே.... இப்போது உள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்படமான எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...
இதை நினைக்கவே பரிதாபமாக உள்ளது.
அதற்கு காரணம், அவற்றுக்கு உண்மையான
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்று தெரியாததே காரணம்....
அவர்கள் என்ன செய்வார்கள்...?
எண்ணெய்வகையில் கலப்படம், உணவு பொருட்களில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லாத உணவென்று கூறமுடியாது...
ஆனால் ஆரோக்கியமில்லா உணவு என்று சொல்லலாம்...!
இன்னும் தெளிவாகச் சொன்னால் கரும்பிற்க்கு பதிலாக சக்கையை சாப்பிடால் எப்படி இருக்கும் அதுபோலதான் நாம் இன்று சத்துக்கள் இல்லாத உணவையே விரும்பி சாப்பிடுகின்றோம்
நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார் நிலையங்கள் எப்படி இருக்கும்?
எதையோ தின்று
எதையோ குடித்து,
எதையோ புகைத்து,
எதையோ மென்று
இல்லாத நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துக் கொண்டான் தமிழன்
எதை சாப்பிட்டாலும் கசப்பாய் முடிப்பதென்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, உதாரணத்திற்கு சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..
ஆப்ரிக்காவிலும், அரேபியாவிலும் காப்பி இருந்தது..
அது போல தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.
பாகம் என்றால் சமையல் என்றும் அதில் இருக்க வேண்டிய காய் இணைந்த பாகற்காய் என்றானது.
புரிகிறதா...?
இவைகள் அனைத்தும் முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் ஒன்று நம் நாட்டில் இல்லை..
என்று நாம் பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரத்தை எடுத்து கொண்டோமோ அன்றே நாம் நமது அழிவை தேடிக்கொண்டோம், இன்று அவைகள் அனைத்தும் நம் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
காபியும் டீயும் பருகியே ஆக வேண்டியவை என்று யாரும் கூறவில்லை.
அவை இன்றியும் நம்மால் வாழமுடியும்...
நாம் நினைத்தாலும் நம்மை சுற்றி காணப்படும் பேக்கரிகள் நம்மை விடாது கருப்பு என துரத்தி கொண்டே இருக்கும்.
பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பல உணவு வகைகள் நமக்கு ஏற்ற உணவுகளே அல்ல.
அவைகள் அனைத்தும் விஷமே.
ஆனால் அவைகள் அனைத்தும் இன்று அத்தியாவசியமாகி நாம் திரும்பும் இடமெங்கு பார்த்தாலும் பேக்கரி பரோட்டா கடை.
இவைகள் பெருகப் பெருக மருத்துவமனைகளும் பெருகுகின்றன.
இச்சமூகம் இன்று எவ்வளவோ நல்ல விஷயங்களை நாகரீகம் எனக்கூறி அனைத்தையும் இழந்து சீரழிந்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது.
ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் காணலாம்.
தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம் மற்றும் பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..
துளசி போல் அருமருந்தில்லை..
கோவிலில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.
தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் தேங்காய் வரை எல்லாம் ஆரோக்கியமே..
தேர்களில் தெய்வங்களுக்கு வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.
உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...
அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், அங்கு ஆடும் சேவலும் எப்படி இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு. அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.
சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..
அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் நோய்க்கு இடம் கொடுக்காது...
மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..
இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்.
கருத்தரிப்பு சிக்கல்
சிசேரியன் என மறுபுறம்.
மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்.
பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ எம்மதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது.
அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்.
அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது
இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு.
அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...
நாம் பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் தவிர நம் ஆரோக்கியத்தை வேறு எதுவும் திருப்பமுடியாது அதை என்று இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்.
ஆம்
மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் ஆகபோவது ஒன்றுமில்லை...
நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..
அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து.
மெல்ல மெல்ல இயற்கைக்குத் திரும்பும் உங்களில் ஒருவன் உங்களுக்காக ஒருவன்.
நாம் மட்டும் நல்லா இருப்போம் என்று நினைத்தால் அது சுயநலம். அது தவறு அல்லவா எனவே முடிந்தவரை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து அவர்களுக்கும் பயன்பட உதவுங்கள்.



2 Comments
Nice information broo 💯👍
ReplyDeleteThanks bro
Delete